பத்தாம் திருமுறை
252 பதிகங்கள், 3000 பாடல்கள்
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
பாடல் எண் : 1

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருளைக் கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.

குறிப்புரை :

முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி)
ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல.
பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
9. సృష్టి


ఆద్యంతాలు లేని సర్వ భూత స్థితుడైన పరాత్పరుడు ఆది శక్తితో కలిసి పరమ శివుడిగా సాక్షాత్కరిస్తాడు. పరాశక్తి నుంచి నాదం వెలువడుతుంది. నాద మంటే శబ్దం. విశ్వావిర్భావ ప్రళయ సమయాలలో ప్రణవ శబ్దంలోనే ఆవిర్భావ పతనాలు జరుగుతుంటాయి.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
सृष्टि


परापरै ने जिसका न तो आदि है और न ही अन्त
शुद्ध चेतना में परापरै के साथ प्रेम किया
और उस प्रकाश में पवित्र परम का आविर्भाव हुआ
परम और परै के मेल से विशुद्ध नाद उत्पन्न हुआ |

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Paraparam that has neither Beginning nor End,
In Pure Consciousness consorted with Paraparai
And in that Light Pure arose Param;
And from union of Param with Parai immaculate
Was Nada born.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఆతియో ఢన్తం ఇలాత భరాభరం
భోతమ తాగభ్ భుణరుం భరాభరై
చోతి యతనిఱ్ భరన్తోన్ఱత్ తోనౄమాం
తీతిల్ భరైఅతన్ భాల్తిగళ్ నాతమే.
ಆತಿಯೋ ಢನ್ತಂ ಇಲಾತ ಭರಾಭರಂ
ಭೋತಮ ತಾಗಭ್ ಭುಣರುಂ ಭರಾಭರೈ
ಚೋತಿ ಯತನಿಱ್ ಭರನ್ತೋನ್ಱತ್ ತೋನೄಮಾಂ
ತೀತಿಲ್ ಭರೈಅತನ್ ಭಾಲ್ತಿಗೞ್ ನಾತಮೇ.
ആതിയോ ഢന്തം ഇലാത ഭരാഭരം
ഭോതമ താഗഭ് ഭുണരും ഭരാഭരൈ
ചോതി യതനിറ് ഭരന്തോന്റത് തോന്റുമാം
തീതില് ഭരൈഅതന് ഭാല്തിഗഴ് നാതമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කතියෝ ටනංතමං ඉලාත පරාපරමං
පෝතම තාකපං පුණරුමං පරාපරෛ
චෝති යතනි.රං. පරනංතෝනං.ර.තං තෝනං.රු.මාමං
තීතිලං පරෛඅතනං. පාලංතිකළං. නාතමේ.
आतियो टन्तम् इलात परापरम्
पोतम ताकप् पुणरुम् परापरै
चोति यतऩिऱ् परन्तोऩ्ऱत् तोऩ्ऱुमाम्
तीतिल् परैअतऩ् पाल्तिकऴ् नातमे.
مرابراب تهالاي متهاندا يأاتهيا
marapaarap ahtaali mahtn:ad aoyihtaa
ريبراب مرن'ب بكاتها ماتهابا
iarapaarap muran'up pakaaht amahtaop
ممارنتها تهرانتهانراب رنيتهاي تهياسو
maamur'naoht htar'naohtn:arap r'inahtay ihtaos
.مايتهانا زهكاتهيلبا نتهااريب لتهيتهي
.eamahtaan: hzakihtlaap nahtaiarap lihteeht
อาถิโย ดะนถะม อิลาถะ ปะราปะระม
โปถะมะ ถากะป ปุณะรุม ปะราปะราย
โจถิ ยะถะณิร ปะระนโถณระถ โถณรุมาม
ถีถิล ปะรายอถะณ ปาลถิกะฬ นาถะเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာထိေယာ တန္ထမ္ အိလာထ ပရာပရမ္
ေပာထမ ထာကပ္ ပုနရုမ္ ပရာပရဲ
ေစာထိ ယထနိရ္ ပရန္ေထာန္ရထ္ ေထာန္ရုမာမ္
ထီထိလ္ ပရဲအထန္ ပာလ္ထိကလ္ နာထေမ.
アーティョー タニ・タミ・ イラータ パラーパラミ・
ポータマ ターカピ・ プナルミ・ パラーパリイ
チョーティ ヤタニリ・ パラニ・トーニ・ラタ・ トーニ・ルマーミ・
ティーティリ・ パリイアタニ・ パーリ・ティカリ・ ナータメー.
аатыйоо тaнтaм ылаатa пaраапaрaм
поотaмa таакап пюнaрюм пaраапaрaы
сооты ятaныт пaрaнтоонрaт тоонрюмаам
титыл пaрaыатaн паалтыкалз наатaмэa.
ahthijoh da:ntham ilahtha pa'rahpa'ram
pohthama thahkap pu'na'rum pa'rahpa'rä
zohthi jathanir pa'ra:nthohnrath thohnrumahm
thihthil pa'räathan pahlthikash :nahthameh.
ātiyō ṭantam ilāta parāparam
pōtama tākap puṇarum parāparai
cōti yataṉiṟ parantōṉṟat tōṉṟumām
tītil paraiataṉ pāltikaḻ nātamē.
aathiyoa da:ntham ilaatha paraaparam
poathama thaakap pu'narum paraaparai
soathi yathani'r para:nthoan'rath thoan'rumaam
theethil paraiathan paalthikazh :naathamae.
சிற்பி